search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பியோ சக்திவேல்"

    • வைரஸ் தொற்று தடுப்பு சார்ந்த சாயம் உள்ளிட்ட சாயம் கண்டுபிடிக்கும் நிறுவனங்களும், அரங்கு அமைத்திருந்தன.
    • உலகளவில், சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது தான் முக்கிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.

    அவிநாசி:

    திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் -டீ கல்லூரி மற்றும் அடல் இன்குபேஷன் மையம் சார்பில் அவிநாசி பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் 'டை-கெம் வேர்ல்டு' என்ற சாயம் மற்றும் ரசாயனங்கள் கண்காட்சி தொடங்கி உள்ளது.

    இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு(பியோ) தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் மற்றும் தொழில் அமைப்பு பிரதிநிதிகள், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இதில், பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி, அதுகுறித்த விளக்கத்தை அளித்தன.

    குறிப்பாக ஆடைகளில் இயற்கை சாயமேற்றுதல், வைரஸ் தொற்று தடுப்பு சார்ந்த சாயம் உள்ளிட்ட சாயம் கண்டுபிடிக்கும் நிறுவனங்களும், அரங்கு அமைத்திருந்தன.பியோதலைவர் சக்திவேல் கூறுகையில், ஆடை உற்பத்தி தொழில் வளர்ச்சியடைந்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப, மதிப்புக்கூட்டல் அவசியம். ஆடை உற்பத்தி தொழில் மேம்பட, ரசாயனம் முக்கியப் பங்காற்றுகிறது.

    அவை உடலுக்கு தீங்கு விளைவிக்காத பக்கவிளைவு ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் உரிய சான்றுடன் நிறுவனங்கள் காட்சி அரங்குகளை அமைத்துள்ளன. உலகளவில் இயற்கை சாயத்துக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது என்றார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், உலகளவில், சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது தான் முக்கிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இயற்கை சார்ந்த சாயத்துக்கு, உலகளவில் வரவேற்பும், எதிர்பார்ப்பும் உள்ளது. புதிய சாயம் கண்டுபிடிப்பாளர்களுக்கும், ஆடை உற்பத்தியாளர்களுக்கும் இதுபோன்ற கண்காட்சிகள் பாலமாக இருக்கும் என்றார்.

    Heading

    Content Area


    ×